|
அதிமதுரகவி,
திருமாள் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கி
பாடவேண்டும் என்று கோரியபோது, காளமேகப் புலவர், ''இதற்கு,
ஒரு வெண்பா வேண்டுமோ, நான் பாதி வெண்பாவில் பாடுவேன்''
என்று பாடியது.,
மெச்சுபுகழ்
வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலென் சென்ம மெடுக்கவா-மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்.
பொருள்:
மெச்சு-தேவர்.
முனிவர் யாவரும் மெச்சுகின்ற புகழ் உடைய வேங்கடவா,
இச்சையில் என் விருப்பப்படி வெண்பாவின் பாதியில் உன்
திரு அவதாரம் பத்தையும் எடுத்துக் கூறுவதற்கு வா-எழுந்தருள்வாய்.
மச்சா-மச்சாவதாரத்தை செய்தவனே, கோலா-வராஹா, கூர்மா,
சிங்கா-நரசிம்ஹா, வாமா-வாமனனே, ராமா-பரசுராமா,
ராமா-தசரதராமா, ராமா-பலராமா, கோபாலா-கிருஷ்ணா,
மாஆவாய்-இனி கல்கி அவதாரம் செய்யப்போகிறவனே! என்று
பாடினார்.
ஹெச். ராமகிருஷ்ணன்
|