|
(1) ரேவதி (கோடம்பாக்கம், சென்னை) கேள்வி:
ராஜதந்திரம் என்றால் என்ன?
பதில்: 18 இடங்களைக் கொண்ட பாமக-விற்கு
கருணாநிதி மாநிலங்களவை வேட்பாளர் இடம் ஒதுக்காத போது,
ஆறே இடங்கைக் கொண்ட மதிமுக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கிய
ஜெயலலிதாவின் செயலை ராஜதந்திரம் என்று சொல்லலாம்.
(2) புவனேஷ்வரி (பாண்டிச்சேரி)
கேள்வி: நம்நாட்டில் மக்கள் ஆட்சி எப்படி
இயங்குகிறது?
பதில்: காஞ்சீபுரம் போலீஸ் டிஎஸ்பி
முனியப்பனை .இடமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி
அங்குள்ள வழக்கறிஞர்கள் புதனன்று மனிதச் சங்கிலிப்
போராட்டம் நடத்தினார்கள். அந்த டிஎஸ்பி, நீதிபதிகள்
அறைக்குச் சென்று அவர்களை மிரட்டி பணி செய்ய விடாமல்
இடையூறு செய்ததாக வக்கீல்கள் கூறுகிறார்கள்.
(3) பாக்யா (சென்னை)
கேள்வி: வாழ்க்கையின் உட்பொருள்...?
பதில்: எழுத்தாளர் சுஜாதா பற்றி அவர் மனைவி
திருமதி சுஜாதா கூறுகையில், "மருத்துவமனைக்கு
போனபோதெல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார் வந்துவிடுவார்.
அப்புறம் அதைப் பற்றியே கதை எழுதிவிடுவார். ஆனால்
இப்போது அவர் இறந்த கதையை யார் எழுதுவது.?
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |