|
(1)நரசிம்மன் (ஸ்ரீரங்கம்)
கேள்வி: வால் போச்சு கத்தி வந்தது என்றால்?
பதில்: விஜயகாந்தின் நில விவ்காரம் ஓரளவு
முடிவுபெறும் நிலையில், ரஜனி நிலம் பற்றி அரசு விசாரணை
என்ற செய்தி....
(2) மைதிலி (நாக்புர்)
கேள்வி: அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி
ஆடினாலும், அடியில் இறங்கித் தான் தியாகம்
வாங்கவேண்டும் என்பதற்கு உதாரணம்.?
பதில்: மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆறாண்டு
இருந்துவிட்டு இப்போது வாய் புளித்ததா மாங்காய்
புளித்ததா என்கிறாரே வழக்கறிஞர் ஜோதி.
(3) பாலன் (ஃபிறாங்க் ஃபர்ட்)
கேள்வி: வீட்டில் இருந்தபடியே மாதாமாதம்
3000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
பதில்: சிதம்பரம் சென்று - தெரிகிறதோ இல்லையோ
- தேவாரம் அரைகுறையாகவாவது பாடுங்கள், முதல்வர்
உங்களுக்கும் மாதம் 3000 ரூபாய் நிதியுதவி தரக்கூடும்
.
(4) ராஜலக்ஷ்மி (சிங்கப்புர்)
கேள்வி: டி வி க்கு பதிலாக கறவை மாடுகளையோ
செம்மறி ஆடுகளையோ ஏழைகளுக்கு இலவசமாகத் தந்திருக்கலாம்
என்று திருனாவுக்கரசு (பா ஜ க) கூறியுள்ளாரே?
பதில்: முதலில் இவர் வீட்டில் இருக்கும்
ஒன்றுக்கும் மேற்பட்ட டி வி களுக்குப் பதிலாக மாடுகளையோ
ஆடுகளையோ வாங்கட்டும். பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாமே.
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |