|
1. பிருந்தா (நெய்வேலி)
கேள்வி:
சென்னையில் "உட்லண்ட்ஸ் டிரைவ்-இன்" மீண்டும்
எதிர்பார்க்கலாமா..?
பதில்: 50 ஆண்டு பழக்கத்தை
ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வரமுடியாதுதான். ஆயினும்
சட்டத்தின் ஆட்சியை மதித்தே ஆகவேண்டும்.
2. செந்தில்நாதன் (கிண்டி,
சென்னை)
கேள்வி: உலகம் வெப்படைவது
பற்றி எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும்
மனிதர்கள் கவலைப்படுவதாக தெரிவதில்லையே..?
பதில்: முடிவு எடுக்கும்
அதிகாரம் படைத்த பெரும்பாலானவர்கள் குளுகுளு அறைகளில்
இருப்பவர்கள். குளுகுளு வாகனங்களில் செல்பவர்கள்.
வெளியே வெப்பம் அதிகரித்தால் என்ன? குளிர் அதிகரித்தால்
என்ன? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்., உலக உருண்டை
வெப்பமடைவதால், ஏற்படக்கூடிய நீண்டகால
விளைவுகளிலிருந்து மனித குலம் தப்ப முடியாது.
3. கண்ணன் (பெங்களூர்)
கேள்வி: கனிமொழியின்
வெளிநாட்டு பயணத்தில் ஏதேனும் நோக்கம்...?
பதில்: எதிரிகள்
வேண்டுமானால் உள்நோக்கத்தைக் கற்ப்பிக்கலாம். ஆனால்
குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் சில
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு செல்வது
வழக்கம்.கனிமொழி சென்றிருப்பதால், உள்நோக்கம் இருக்குமோ
என்று எண்ணுவது தவறான அணுகுமுறை.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |