|
1. வெங்கடேஷ் பாலாஜி (அம்பத்தூர், சென்னை)
கேள்வி : உண்மையான பத்திரிகை தர்மம் என்றால்
என்ன?
பதில் : நடைபெறும் அதர்மத்தை சுட்டிக்காட்டுவது.
2. வெண்பா (சன்ஹைடெக், கோடம்பாக்கம்-சென்னை)
கேள்வி : ஒருவரை பேட்டி காணும்போது எந்த
மாதிரியான கேள்விகளை கேட்கலாம்? எந்த மாதிரி கேள்விகளை
கேட்கக்கூடாது?
பதில் : அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்
கேள்வி எதையும் கேட்கக்கூடாது. வேறு எந்தக் கேள்வி
வேண்டுமானாலும் கேட்கலாம்..
3. ரேவதி பாலாஜி (அம்பத்தூர், சென்னை)
கேள்வி : மதச்சார்பின்மை என்றால் என்ன?
பதில் : என்னைப் பொருத்தவரையில் எம்மதமும்
சம்மதம்.
4. பாலாம்பாள் (சென்னை)
கேள்வி : நாட்டில் நிறைய குப்பையான
புத்தகங்கள்தான் விற்பனையாகின்றன., நல்ல புத்தகங்கள்
விற்பனையாவது அவ்வளவு இல்லையே! இதற்கு என்ன தீர்வு?
பதில் : நல்ல புத்தகங்களை நாடுவோரின்
எண்ணிக்கை குறைவு. நாளடைவில் நல்ல புத்தகங்களே இல்லாத
நிலை உருவாகக்கூடும். கடை வைத்தேன், கொள்வார் இல்லை,
கட்டிவிட்டேன் என்று வள்ளலாரே கூறவில்லையா...!.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|