மாயாபஜார் என்றாலே கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.... என்ற பாடலும் எஸ் வி ரங்காராவும் நினைவுக்கு வருவார்கள். அதே மாயாபஜார் கதையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் கடோ ற்கஜன் என்கிற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ்.

பஞ்ச பாண்டவர்களில் பீமனுடைய மகனான கடோ ற்கஜன் மயாயவியானவன் மட்டுமில்லாமல் நல்ல திடசாலியும், மகாபாரத கதைப்படி கடோ ற்கஜன் துரியோதனனை அழிக்கும் புராணங்களை படித்துள்ளோம். கதைகளில் கேள்விப்பட்டுள்ளோம். இந்தப் படத்தில் அர்ஜுனனின் மகன் அபிமன்யூ பலராமனின் மகள் வச்சலாவை விரும்புகின்றான். இக்காதலுக்கு பலராமன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். கிருஷ்ணரின் உதவியால் கடோ ற்கஜன் எப்படி இந்த இருவரையும் சேர்த்து வைக்கிறான் என்பதைத்தான் இப்படம் மூலம் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்கள்.
சிறுவயது கடோ ற்கஜனை கட்டு என்று காட்டுகிறார்கள். அவனது உயிர் நண்பனாக கர்ஜு என்கிற குட்டி யானையின் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் கடம் பார்க்கும் குழந்தைகள் குதூகலிக்கிறார்கள்.
சம்மர் விடுமுறைக்கு ஏற்றாற்போல் சரியான நேரத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் ஜி வி பிலிம்ஸ்.
செ.பா
|