பட்டாளம் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. ஆனால் அவர் அடுத்து இயக்குவதாக இருந்த ஒரு படம் கைவிடப்படிருப்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி. பருத்தி வீரன் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்து, அதற்காக
அட்வான்சும் கொடுத்திருந்தார் லிங்குசாமி. ஆனால் தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தைக் கடந்த வாரம் லிங்குசாமியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாராம் கார்த்தி.
 காரணம்? படத்தின் கதையை இரண்டு முறை சொல்லியும் திருப்தியாக இல்லையாம் பருத்தி வீரனுக்கு. வேறு கதையைச் சொன்னால் பரிசீலிக்கலாம் என்றாராம். அதற்கு லிங்குசாமி தயாராக இல்லாததால் இருவருமே சிரித்த முகத்துடன் விலகிக்கொண்டார்களாம்.
அப்படியே இன்னொரு சங்கடமும் வந்திருக்கிறது லிங்குவுக்கு. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயன்ட் முவீஸ் லிங்குசாமிக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் பணத்தைத் திருப்பி வாங்கிவிட்டார்களாம்.
|