மதுரைக்கு வெளியே கொஞ்சம் தள்ளி 100 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார் கருணாஸ். ஆனால், சென்னையில் இருந்த சொந்த வீட்டை விற்றுவிட்டார். ஏன்? இவர் இதுவரைக்கும் 34 படங்களின் திருநெல்வேலி கன்னியாக்குமரி பகுதி விநியோகஸ்தராக இருந்திருக்கிறார். இந்த ஒரு காரணம் போதாதா வீட்டை விற்க?
பிறகு எப்படி 100 ஏக்கர்? இது இவரது லட்சியமாம். மிக பிரமாண்டமாக ஒரு முதியோர் இல்லம் கட்டவேண்டும் என்பது கருணாசின் ஆசை. அங்கு இலவசமாக முதியவர்களைத் தங்க வைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கிறாராம். காற்றோட்டம், தண்ணீர் வசதி இவற்றோடு ஒரு குறையும் இல்லாமல் இதை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் இத்தனை பெரிய இடம் என்கிறார். தன்னைப் போலவே மனிதாபிமானம் கொண்டிருக்கிற கருணாசை பாராட்டிய லாரன்ஸ், இந்த முதியோர் இல்லம் கட்டுவதற்காகத் தனது பங்காக ஐம்பதாயிரம் தருவதாக உறுதியளித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் நல்லது செய்வதற்கும் இத்தனை போட்டியா?
|