ரிலீசுக்குத் தயாராகிவிட்டது கலைஞரின் உளியின் ஓசை. கிட்டதட்ட ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பெரும் செலவை செட்டுகளே சாப்பிட்டுவிட்டனவாம். வழக்கமாக வசனங்களை நீள நீளமாக எழுதும் கலைஞர் இந்த முறை மணி ரத்தினமே வியக்கிற மாதிரி சுருக்கமாக எழுதியிருக்கிறாராம்.
 கடந்த இரு தினங்களுக்கு முன் பேதர் பிரேம்ஸ் தியேட்டரில் இப்படத்தை பார்த்து ரசிக்க, ரஜினி, கமல் இருவரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கே அது புது அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால், தமிழ்நாட்டின் அத்தனை அமைச்சர்களும் அங்கே வந்திருந்தார்கள் படத்தைப் பார்க்க.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படத்தை அப்படியே மொத்தமாக ஒரு விலை பேசி வாங்கிவிட்டாராம் உணவு அமைச்சர் எ.வ. வேலு. தமிழகம் முழுவதும் விநியோகஸ்தர்களை நியமித்தது, தியேட்டர் பிடித்தது எல்லாமே அமைச்சரின் வேலைதானாம்.
சரி... படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியும் கமலும் என்ன சொன்னார்களாம்?
|