சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன அல்லவா? பலரும் நயன்தாராவை இது குறித்துக் கேள்விகள் கேட்கத் துவங்கிவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு இந்தச் செய்தியைக் கசிய விட்டவரே சிம்புதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நயன். இதனால், போனில் சிம்புவை அழைத்த நயன், தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம்.
முன்பு இருவரும் நெருக்கமாக இருந்த ஸ்டில்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்தவரும் இவர்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த நயன், இந்த முறை கடும் கோபத்தைக் காட்டியிருக்கிறார். இனிமேல் தன்னைத் தொடர்புகொள்ள முயலக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறாராம். இந்த ஆன்ட்டி க்ளைமாக்ஸ் சிம்புவுக்குக் கவலை அளித்துள்ளதாக தெரிகிறது.
தனக்கும் சிம்புவுக்கும் காதல் இல்லை. அந்தச் சந்திப்பு வெறும் சம்பிரதாயமான சந்திப்புதான் என்பதையும் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களிடம் கூறிவருகிறாராம். பத்திரிகையாளர்களுக்கும் இதே பதிலைச் சொல்லச் சொல்லித் தனது மேனேஜர், மற்றும் மக்கள் தொடர்பாளருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் நயன்.
|