'ரோபோ' படத்தின் வேலைகள் எப்போது ஆரம்பிக்கம் என்று யாருக்குமே
தெரியாது. அதேசமயம் 'குசேலன்' படம் ஆகஸ்ட் மாதம்
வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குசேலனுக்குப் பிறகு ரஜினி குறைந்தபட்சம் ஒரு மாத காலம்
ஓய்வெடுப்பார் என்று சொல்கிறார்கள். 'ரோபோ' படத்தில்
அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், உடல்
ரீதியாக ரஜினி தன்னை தயார்படுத்தி கொள்வதற்காக,
கேரளாவில் உள்ள மூலிகை சிகிச்சைக்கு செல்வார்
என்கிறார்கள்.
அதற்கு முன்பாக படத்திற்கான லொக்கேஷன்களை தேட
ஆரம்பித்துவிட்டாராம் ஷங்கர். தன்னுடைய மேனேஜர் மற்றும்
அசோசியேட் டைரக்டர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி
வைத்துள்ளாராம் ஷங்கர்.
படத்தில் நடிக்க இன்னும் ஐஸ்வர்யாராய் சம்மதம்
தெரிவிக்கவில்லை. ஷங்கர் படம் என்பதால் 'ஐஸ்' ஓ.கே
சொல்லி விடுவார் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். 'ரோபோ'
எடுத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும் எனப்து மட்டும்
இன்னும் யாருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லையாம். |