சிம்புவுடன் நடிக்கும் நடிகைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கும் சிம்புவுக்கும் நெருக்கம் அதிகமாகி, அதே வேகத்தில் பிரச்சினையும் அதிகமாகி சிக்கல்களை உருவாக்கிக் கெதள்வது வாடிக்கை. இந்த லட்சணத்தில் சுப்ரீம் ஸ்டாரின் மகள் வரலட்சுமி திருடா திருடியில் ஒப்பந்தம் ஆனதும், மறுபரிசீலனை செய்யுங்க தலைவா என்று அவரை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம் அவரது தொண்டர்கள்.
அவர்களிடம், என் பொண்ணு புத்திசாலி. அவளுக்கு எப்படி எப்படி நடந்துக்கணும் என்று தெரியும் என்று கூறிவிட்டாராம் சரத்குமார். ஆனாலும், உலகம் முழுக்க இருக்கிற தனது நண்பர்களிடம் எதுக்கும் ஒரு கண்ணு வைங்க இரண்டு பேர் மேலேயும் என்று சொல்லவும் தவறவில்லையாம்.
ஒரே மூச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா வரத் திட்டமிட்டிருக்கும் சிம்புவின் ஒரே பொழுது போக்கு இன்டர்நெட்தானாம். அதில் வரும் தகவல்களை படித்துக் கொள்வதோடு அவ்வப்போது சென்னைக்கும் போன் அடித்துத் தகவல்களைத் திரட்டுகிறாராம். அவருக்குத் தெரியுமா, இந்த காம்பினேஷன் குறித்து வந்த எச்சரிக்கைப் புகார்கள்?