எல்லாவற்றுக்கும் பச்சைக் கொடி காட்டும் சத்யராஜ், சிபிராஜின் இன்னொரு ஆசையையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார். தனக்கு விரைவில் திருமணம் ஆவதை முன்னிட்டு வெகு விமரிசையாக ஒரு பேச்சுலர் பார்ட்டி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம் சிபி. அதில் 'தண்ணீர்' பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்பதும் அவரது விருப்பம். தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல, பணத்தை 'தண்ணீராக' செலவு செய்ய முன்வந்தார் தந்தையும்.
முன்னணி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விடிய விடிய விருந்து நடந்ததது. ரஜினி, கமல் தவிர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டார்களாம். ஆனாலும், சிபிக்கு ஒரேயொரு வருத்தம். தனது உற்ற தோழரான ரகுவண்ணன் வரவில்லை என்பதுதான். இவருக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்றும், அது தொடர்பாக வெளியான வழக்குகளும் இந்த நிகழ்ச்சிக்கு அவரை வர விடாமல் செய்தாலும், இருந்த இடத்திலிருந்தே நண்பனை வாழ்த்தினாராம்.