புதிய சட்டசபையை திறந்து வைத்தார் பிரதமர்    |    பென்னாகரம் இடைத்தேர்தல் : இறுதி பட்டியல் வெளியீடு    |    ரஞ்சிதா விவகாரம்: ஒப்புக் கொண்டார் நித்தியானந்தா    |    சேப்பாக்கம்: 2 ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன    |    நேரு குடும்பத்திலிருந்து முதன் முறையாக...    |    தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானில் மீண்டும் குண்டு வெடிப்பு    |    உளவுத் துறை எச்சரிக்கை: கொச்சி துறைமுகத்தில் பாதுகாப்பு தீவிரம்    |    பிரதமர் புதிய சட்டமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார்    |    இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வாய்ப்பு: அமெரிக்கா ஆர்வம்    |    மகளிர் மசோதா நிறைவேற்றம்: ஜெயலலிதா பாராட்டு    |    பென்னாகரம்: 33 மனுக்கள் ஏற்பு - 4 மனுக்கள் தள்ளுபடி    |    மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டம்: ஏப்ரல் 5 வழக்கு விசாரணை    |    சாந்தி ரங்கநாதனுக்கு பொற்றாமரை விருது வழங்கப்பட்டது                                                 
ஆறுமுகத்தில் இன்னொரு நீலாம்பரி?

bharath-ramya-krishnan
சில பாத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அவற்றில் ஒன்று நீலாம்பரி. படையப்பாவில் ரஜினிக்கே சவால் விட்டுக் கலக்கிய பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் ஜொலித்ததை யாராலும் மறக்க முடியாது. பல ஆண்டுகள் கழித்து அதே அளவுக்கு வலுவான பத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும்படம்தான் ஆறுமுகம்.

பரத் - ப்ரியாமணியை வைத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எடுத்துவரும் படம் ஆறுமுகம். புடிச்சிருக்கு படத்தைத் தயாரித்த கூல் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ரம்யா அசத்தலான வேடத்தில் நடிக்கிறார். இட்லிக்கடை நடத்தும் பரத்துக்கும் கோடீஸ்வரி ரம்யாவுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதையின் மையம். ஒரு திருப்புமுனைக்காகக் காத்திருந்த ரம்யா இந்தப் பாத்திரத்தைப் பற்றிக் கேட்டதும் ஒப்புக் கொண்டுவிட்டாராம்.



ஆறுமுகத்தில் இன்னொரு நீலாம்பரியா என்றால் அதுதான் இல்லை. இது முழுக்க முழுக்க நெகடிவ்வான கேரக்டர்னு சொல்ல முடியாது. கொள்கைப் பிடிப்புள்ள கேரக்டர். இன்னும் கேட்டா படத்துல வில்லத்தன்மே இல்லைன்னுதான் டைரக்டர் சொன்னார் என்கிறார் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் நீலாம்பரி என்றால் இதில் மாலினி.

பரத்திற்கு ஜோடியாக ப்ரியாமணியும் தங்கையாக சரண்யா மோகனும் நடிக்கிறார்கள். பரத்தும் ப்ரியாமணியும் கல்யாணம் ஆகாமலேயே குடித்தனம் நடத்தும் புதுமையான சம்பவமும் படத்தில் உண்டு.

அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களில் சுரேஷுடன் இணைந்து மாபெரும் ஹிட் பாடல்களைக் கொடுத்த தேவா இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைகிறார்.

சித செண்பககுமார் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்குத் திரைக்கு வரும் என்று தெரிகிறது.


மேலும் September 22nd, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     ஸ்ரீகாந்த், பூமிகாவுக்காகக் காத்திருக்கும் மா


உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : A day where problems may disturb your way of thinking. Feeling sorry for yo...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 Blazing Summer?

Summer in Chennai is all about coming to terms with the merciless rays of the sun....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.