ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அந்த பூதம் எப்போது ஒழியுமோ என்றும் ஊருக்கு நாலு பேர் உரத்துப் பேசுவதைக் காலங் காலமாகக் கேட்டு வருகிறோம்.'அது என்ன , இத்தனைப் பேர் ஏதேதோ முயன்றும் இந்த ஊழல் பூதம் ஒழிய மாட்டேன் என்கிறதே!' என்று நம்மில் பலர் அதிர்ச்சியும் சிலர் ஆச்சரியமும் அடைகிறோம் அல்லவா? "இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பட என்ன இருக்கிறது.? ஊழல் நமது தேசிய ஒழுக்கமாகி எத்தனையோ நாட்களாயிற்றே.ஒழிப்பதா, ஒழிக்காமல் விடுவதா? என்ற 'ஹாம்லடின் சந்தேக'த்துக்கே இடமில்லை" என்று ஒரு குரல் கேட்கிறது. அந்த அசரீரி அனுபவஸ்தரின் விளக்கத்தைக் கேட்டுவிடுவோம்!...
மேலும் படிக்க