புதுடெல்லி, செப்.11 (டிஎன்எஸ்)
மாற்றுத்திறன் படைத்தவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் பொது மக்கள் உணர வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் டி.நெப்போலியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுடெல்லியில் 2009Mம் ஆண்டுக்கான தேசிய அறக்கட்டளை (நேஷனல் ட்ரஸ்ட்) அமைப்பின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கி, நெப்போலியன் பேசியதாவது:
மாற்றுத்திறன் படைத்தவர்களின் நலன்களுக்காக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்பே தேசிய அறக்கட்டளை.
மாற்றுத்திறன் படைத்தவர்களின் நல்வாழ்வுக்காக பணி செய்து வரும் அமைப்புகள், அவர்களைப் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் பல்வேறு செயல்களை செய்ய முடியும் என்பதை பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இத்தகைய முயற்சிகள் மூலம் மாற்றுத் திறன் படைத்தவர்களின் வாழ்வில் நிச்சயம் தேசிய அறக்கட்டளை மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை மற்றவர்களுக்கு நிகரான குடிமக்களாக மாற்றும்.
பெற்றோர் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு யார் ஆதரவு என்பது போன்ற சிக்கலான கேள்விகளுக்கு தேசிய அறக்கட்டளை விடை காண முயல்கிறது. இதற்கு சில உதவி அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் உள்ளூர் நிலையான ஆதரவு குழுக்களின் பணி மிக முக்கியமானது.
இவ்வாறு அமைச்சர் நெப்போலியன் பேசினார்.
(டிஎன்எஸ்)
Sep 11, 2009
* Do not use semicolon(;)