மும்பை, நவ.3 (டிஎன்எஸ்)
மும்பை பங்குச்சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. காலை முதல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீட்டெண் சென்செக்ஸ் பிற்பகலுக்குப் பின் தொடர்ந்து சரிந்து வந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 491 புள்ளிகள் குறைந்து 15,404 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வர்த்தக முடிவில் 147 புள்ளிகள் குறைந்து 4,563 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஜெட் ஏர்வேஸ், மாரிகோ லிமிடெட். பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், இந்தியன் ஹோட்டல்ஸ், பார்தி ஏர்டெல், பேங்க் ஆஃப் இந்தியா, அசோக் லேலாண்டு, காத்ரெஜ், டைட்டன், மாருதி சுஜுகி போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.
இன்டியாபுல்ஸ், ரோல்ட்டா இந்தியா, சுஸ்லான் எனர்ஜி, சிண்டிகேட், எடுகாம், இந்தியா சிமெண்ட், ஹிண்டால்கோ, பல்ராம்பூர், விடியோகான், டிஎல்எஃப். ஃபெடரல் பேங்க், எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)