
சென்னை டிச-15.(டிஎன்எஸ்) சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் குவித்த வீரேந்திர சேவாக்கை இங்கிலாந்து வீரர் ஸ்ட்ராஸ் மற்றும் இந்திய வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற இங்கிலாந்து அணி 387 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று களமிறங்கிய இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
68 பந்துகளை மட்டுமே சந்தித்த சேவாக் 83 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக இந்தியாவின் வெற்றி நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் ரன் குவிப்பது சுலபமான விஷயம் அல்ல என்றும், தனது வித்தியாசமான ஆட்டத்தின் மூலம் சேவாக் அதிரடியாக ரன்களை குவித்துள்ளார் என்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்ட்ராஸ் கூறியுள்ளார்.
உலகின் மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடும் போது, சேவாக் வித்தியாசமான வீரர் என்று அவர் பாராட்டியுள்ளார். (டிஎன்எஸ்)
Dec 15, 2008
* Do not use semicolon(;)