அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் – டோனி அறிவிப்பு

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் எம்.எஸ்.தோனி, மும்பையில் நேற்று போட்டி நடைபெறும் மைதானத்தில் வர்ணனையாளர் இயான் பிஷப் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

அப்போது,  சென்னையில் விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறுவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அநீதி இழைத்து போல் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:

இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது, மும்பை மீது எனக்கு ஒரு அணியாகவும் தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்,
அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம். இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி.

ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தோனியின் முடிவை வரவேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இது ஒரு அற்புதமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

அவர் கூறியது போல, தனது அணிக்கும் அவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறார் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார், அவர் இந்தியாவை இதுவரை கண்டிராத உயரத்திற்கு கொண்டு சென்றார் என்றும் தோனி குறித்து கவாஸ்கர் பாராட்டு தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools