அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன் அதிமுக-வினர் குவிந்துள்ளனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news