அதிமுக வேட்பாளர் நேர்காணல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் தொடங்கியது

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வந்த வேட்பாளர் விருப்ப மனு நேற்றுடன் நிறைவடைந்தது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து  அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 9 பேர் கொண்ட குழு நேர்காணலை நடத்துகிறது.

அ.தி.மு.க. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வேட்பாளர் தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை, மாலை என இரு பிரிவுகளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools