X

அத்திவரதரை தரிசிக்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழாவின் 28-ம் நாளான நேற்று இளம் நீலநிற பட்டாடையில் காட்சியளித்த அத்தி வரதரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் குவிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் காயமடைந்தனர். இதனால்,கூட்டம் குறைந்த பின் கோவிலுக்கு செல்லும்படி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

View more…

Tags: south news