அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், கேம்ப்பெல்லில் இருந்து வடகிழக்கே 63 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools