அனைத்து புகழுக்கும் இளைய வீரர்கள் தகுதியானவர்கள் – ராகுல் டிராவிட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. குறிப்பாக பிரிஸ்பேனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இளம் வீரர்களின் அபார செயல்பாட்டால் இந்தியா வெற்றி பெற்றது.

முகமது சிராஜ் ஐந்து விக்கெட் வீழ்த்த ஷர்துல் தாகூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் எனவும் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மான் கில், ரிஷப் பண்ட் (நாட்அவுட்) அரைசதம் என அசத்தினர்.

இளம் வீரர்கள் ஜொலிக்க 2016-ம் ஆண்டில் இருந்து 2019 வரை 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணிக்கு, இந்தியா ‘ஏ’ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுதான் காரணம் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனால், தான் தேவையில்லாத பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறேன் என ராகுல் டிராவிட் தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘தேவையில்லாத பாராட்டுக்கள். அனைத்து மகிழ்ச்சிக்கும், புகழுக்கும் இளைய வீரர்கள் தகுதியானர்கள்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools