அமெரிக்க அதிபரும், பிரதமர் மோடியும் இன்று காணொலி மூலம் சந்திக்கிறார்கள்

அமெரிக்கா – இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இரு தலைவர்களும் காணொலி வாயிலாக இன்று சந்திக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையிலும், தடைகளை மீறி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலுக்கு இந்தியா தயாராகி உள்ள சூழலில் ஜோ
பைடன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools