அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை – அமலாக்கத்துறை அறிவிப்பு

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் வந்தனர்.

மேலும், அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 20 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news