‘ஆலம்பனா’ அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் – நடிகர் வைபவ்

கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டசி காமெடி கதையம்சம் கொண்ட படமாக ஆலம்பனா உருவாகி இருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ஆலம்பனா டிசம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய வைபவ் படத்தில் உண்மையில் சிரித்து மகிழக்கூடிய வகையில் காமெடி இருக்கும் என்று தெரிவித்தார்.

”இப்படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனம் சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார்.

படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும்.”என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamilcinema