ஆல்-ரவுண்டர் ஹோல்டரின் வருகை அணிக்கு வலு சேர்த்துள்ளது – கே.எல்.ராகுல் பேட்டி

ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நிலைத்து நின்று ஆடவும், வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கவும் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளோம். இன்று (நேற்று) மீண்டும்
அதைச் செய்தோம்.

இது போன்ற விளையாட்டுக்களில் வெற்றி பெறுவது மிகுந்த நம்பிக்கையைத் தரும். ஆக்ரோஷமான, ஆனால் ஆபத்து இல்லாத கிரிக்கெட்டை விளையாடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்க வேண்டும், ஆனால் ஸ்மார்ட் ஷாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆல்-ரவுண்டர் ஹோல்டரின் சேர்க்கை அணிக்கு வலு சேர்த்துள்ளது.

கடந்த 3-4 சீசன்களாக நான் ஹூடாவுடன் விளையாடி வருகிறேன். அவர் தனது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் அதைப் சிறப்பாக பயன்படுத்துகிறார், இப்போது மிடில் ஆர்டரில்
நம்பக்கூடிய ஒருவராக அவர் மாறியிருக்கிறார்.

இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools