ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணியில் இணைந்த பென் ஸ்டோக்

இந்திய அணி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

அந்த சமயத்தில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுங்கி இருக்க அவர் முடிவு செய்தார்.

இதனால் இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் ஆகியவற்றில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், ஆஷஸ் தொடரில் பங்கேற்க தயாராக உள்ளேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். இதையடுத்து, ஆஷஸ் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools