ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டி20 போட்டி – இந்தியா வெற்றி

உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

அந்த வகையில், திருவனந்தபுரத்தில் நேற்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது. இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில், முதலாவதாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து, ஜோஷ் இங்லீஸ் 2 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், டிம் டேவிட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 14 ஓவரில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வாடே களத்தில் விளையாடினர். இதில், மார்கஸ் 45 ரன்களில் அவுட்டானதை அடுத்து, மேத்யூ வாடேவுடன் சியோன் அபாட் விளையாடி ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, நாதன் எல்லிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

16 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 155 ரன்கள் எடுத்திருந்தது. 20 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. 17வது ஓவரில் ஆடம் சம்பாவும் ஒரு ரன்னில் அவுட்டானதை அடுத்து தன்வீர் சங்கா களமிறங்கினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து டி20 தொடரில் 2வது ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports