இத்தாலி ஓபன் டென்னிஸ் – ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி அசத்தினார் ஜோகோவிச்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3 என்ற கணக்கில் வென்றார்.

2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் வெல்லும் 10-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools