இந்தியாவில் புதிதாக 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,729 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 7,545, மகாராஷ்டிராவில் 1,141 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 33 லட்சத்து 754 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 136 பேர் உள்பட மேலும் 221 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,59,873 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும்12,165 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 959 ஆக உயர்ந்தது. தற்போது 1,48,922 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 5,65,276 டோஸ்களும், இதுவரை 107 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

தீபாவளி நாளான நேற்று நாடு முழுவதும் பரிசோதனை 6,70,847 ஆக குறைந்தது. இதுவரை 61.30 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools