இந்தியாவில் புதிதாக 14,506 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று கூடுவதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 17,073 ஆக இருந்தது. நேற்று 11,793 ஆக குறைந்த நிலையில் இன்று 14,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,482 பேர், கேரளாவில் 2,993 பேர், தமிழ்நாட்டில் 1,484 பேருக்கு தொற்று உறுதியானது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 345 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 11,574 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 666 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 99,602 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,902 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் மேலும் 30 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 மரணங்கள் அடங்கும்.

இதுதவிர நேற்று மகாராஷ்டிராவில் 5 பேர், டெல்லியில் 4 பேர், கோவாவில் 3 பேர், பீகாரில் 2 பேர், கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாபில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 46 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 13,44,788 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 4,33,659 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 86.19 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools