இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி – தென் ஆப்பிரிக்க கேப்டனாக எல்கர் தேர்வு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

36 வயதான டீன் எல்கர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், ‘கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்’ என்றார்.

ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் எல்கர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஓய்வுக்கு மரியாதை கொடுக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இதனை தெரிவித்துள்ளது.

பவுமா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports