இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை இன்று நடைபெறாது – கனிமொழி எம்.பி அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் சோனியாவும், பிரியங்காவும் இன்று ஆலோசனை நடத்தினார்கள். மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு விருந்தளிக்கிறார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறு, சிறு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிரதான கட்சியான காங்கிரசுடன் இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை ஒரு தொகுதி கூடுதலாக காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகவும் சில தொகுதிகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சோனியாவிடம் பேச வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

இந்த நிலையில் இன்று கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் சந்தித்த போது இது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த கனிமொழி இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் இன்று நடைபெறாது. அரசியலுக்காக பா.ஜனதா வெறுப்புணர்வை உருவாக்கும் போது பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news