இந்திய அணி திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது – டீன் எல்கர் கருத்து

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்திய அணி திறமையான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளம் மற்றும் சீதோஷ்ண நிலையை இந்திய பவுலர் ஒருவரால் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools