இந்தி மொழியில் ’சூரரைப் போற்று’! – ஏப்ரல் 4 ஆம் தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை தற்போது இந்தியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சூரரைப்போற்று படத்தை இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர். இப்படத்தை வருகிற ஏப்ரல் 4-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரரைப் போற்று படத்தின் தமிழ் பதிப்பும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools