இந்த வருட ஐபிஎல் தொடரில் தான் மும்பை அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது – ஆகாஷ் அம்பானி

ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. இந்த வருட சீசனுடன் 13 வருடங்கள் முடிவடைந்து விட்டன. இதில் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி உரிமையாளராக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றாலும், கடந்த 13 ஆண்டுகளில் இந்த வருடம்தான் சிறந்த ஆட்டம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் அம்பானி கூறுகையில் ‘‘எங்களுடைய வெற்றி மற்றும் தோல்வி கடந்த ஆண்டு சரி சமமாக இருந்தது. ஆனால், இந்த முறை தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதனால் நம்பமுடியாத சீசனாக அமைந்தது. எங்களுடைய திட்டத்தை சரியாக ஆடுகளத்தில் செயல்படுத்தினோம். 95 முதல் 98 சதவீதம் வரை சரியாக செயல்பட்டதாக தெரிவிப்பேன். நாங்கள் விளையாடியதில் இந்த சீசன்தான் மிகவம் சிறந்தது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools