X

இரண்டு பக்கத்திலும் புது பந்துகளை பயன்படுத்தலாம் – ஹர்பஜன் சிங் யோசனை

மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று வீரர்களுக்கு இடையில் பரவி விடக்கூடாது என்பதில் ஐசிசி எச்சரிக்கையாக உள்ளது.

போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர். இந்த எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதால் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.

‘எச்சில்’ பயன்படுத்தாவிடில் பந்து ஷைனிங் தன்மையை உடனடியாக இழந்துவிடும். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் திணற வேண்டியிருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகிவிடும். இதனால் இரண்டு பக்கத்திலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Tags: sports news