உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும்,

* சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்

* சென்னை நொளம்பூர், பெரம்பலூரில் கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள்

* மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம்

ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார்.

இதையடுத்து வாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools