உலக கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிக்க முடிவு செய்திருக்கும் இம்ரான் தாஹிர்

தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தாலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இலங்கை தொடருக்குப்பின் தென்ஆப்பிரிக்கா உலகக்கோப்பையில்தான் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் தாஹிர் இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 3 முறை ஐந்து விக்கெட்டுக்களும், 6 முறை நான்கு விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news