ஊட்டி தாவரவியல் பூங்காவில் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை

மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சுற்றுலா வுக்கு பெயர் போன பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்ப டும். .சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலை துறையினர் செய்து வருகின்றனர்.

கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள். சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும், மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools