என்னை தற்கொலையில் இருந்து மீட்டவர் ராகுல் காந்தி – நடிகை ரம்யா பேட்டி

கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. ‘சான்டல்வுட் குயின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் பல்வேறுவிஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையை இழந்து 2 வாரங்களுக்குப் பிறகு நான் பாராளுமன்றத்தில் இருந்தேன். அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? யாரிடமும் எது குறித்துப் பேச வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன்.

அப்பாவின் பிரிவு துயரை நான் அரசியல் பணிகளில் ஈடுபட்டு மறக்க முயற்சித்தேன். அப்படித் தொடர்ந்து என்னை பணியாற்ற வைத்தது மாண்டியா மக்கள் தான். என் வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வமாக நான் நினைப்பது என் அம்மா, அப்பா, அதற்குப் பிறகு ராகுல்காந்தி.

என் அப்பா இறந்த பிறகு நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். நிறையவும் உடைந்து போயிருந்தேன். தேர்தலிலும் தோற்றிருந்த அந்த நேரம் மிகவும் துக்கம் நிறைந்த சமயம். அந்த நேரத்தில் எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது ராகுல்காந்திதான். நான் மீண்டுவர அவர் உதவினார் என்று கூறியிருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools