என்றும் தலைசிறந்த பினிஷர் – டோனியை பாராட்டிய விராட் கோலி

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.

சேசிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி.

இந்நிலையில், கிங் இஸ் பேக் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர். மீண்டும் ஒருமுறை தன்னை துள்ளிக் குதிக்கச் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools