எல்லை உட்கட்டமைப்பு பணிகளில் 3 ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தி விடுவோம் – இந்திய எல்லை சாலைகள் தலைவர் தகவல்

இந்திய எல்லை சாலைகள் அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அசல் எல்லைக் கோட்டு பகுதியில் 3,488 கி.மீ. தொலைவுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வ பணியில் செயல்பட்டு வருகிறது. இந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணியில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சீனாவை, இந்தியா வீழ்த்தி விடும்.

கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 295 திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தியாவுக்கு முன்பே ஒரு தசாப்தத்திற்கு முன், அசல் எல்லைக் கோட்டு பகுதி முழுவதும் சீனா அதன் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளைத் தொடங்கிவிட்டது.

ஆனால், தற்போதுள்ள அரசு, தனது எண்ணம் மற்றும் கொள்கையை மாற்றி உள்ளது. எங்களுக்கு ஆதரவளித்து உள்ளது. அனைத்து வித வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் பணிகளை முடிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news