எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ படப்பிடிப்பு முடிந்தது

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொம்மை’. மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது.

சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்எச். எல்எல்பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools