ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பிரச்சாரம் செய்ய குஷ்பு முடிவு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நட்சத்திர பேச்சாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எப்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போகிறீர்கள் என்று நடிகை குஷ்புவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

வேட்புமனு தாக்கல் இன்றுதான் முடிகிறது. அதை தொடர்ந்து மனுக்கள் பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனால் எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை.

நான் கன்வீனராகவும் இருப்பதால் தலைமையில் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்தில் மட்டும் நான் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news