ஐபிஎல் அணிகள் குறித்து வருத்தப்படும் ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் உள்ளூர் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த பயிற்சியாளர்களை கொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். அவர்கள் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் துறையில், பயிற்சியாளர் துறையிலும் ஏராளமான திறமைகள் உள்ளன.

நாம் அவர்கள் வளர்வதற்கான நம்பிக்கை கொடுப்பது அவசியம். அப்படி செய்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஐபிஎல் தொடரில் ஏராளமானவர்களுக்கு துணைப் பயிற்சியாளர்கள் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.

ஐபிஎல் தொடரில் நிறைய இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் சூழ்நிலைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கும். பயிற்சியாளர்களும் அதேபோல்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்திய பயிற்சியாளர்கள் மூலம் அணிகள் அதிக பயனை அடைந்திருப்பார்கள். இதனால் பயிற்சியாளர்கள் வளர வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: sports news