ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்கும் நடிகர் மோகன்லால்?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடரில் 8 அணிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அந்த புதிய அணியை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்த நடிகர் மோகன்லால், இதுகுறித்த பணிகளுக்காக தான் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக் கான், ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா ஆகிய திரையுலக பிரபலங்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools