ஐபிஎல் தொடரில் இருந்தும் விராட் கோலி விலகலாம் – கவாஸ்கர் கணிப்பு

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னணி வீரர்கள் இன்றி இளம் வீரர்களுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர் எதற்காக விலகினார் என்பது கேள்வி கூறியாக இருந்தது. இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் இருந்தும் விராட் கோலி விலகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது போல, ஐபிஎல் 2024 தொடரிலும் விராட் கோலி விலகலாம். ரோகித் சர்மா குறித்து அவர் பேசியது, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது சரி. இதனால் ரோகித் எந்தவித பதற்றம் இன்றி விளையாடலாம்.

துருவ் குறித்து பேசியது, இங்கிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools